புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தது பற்றி...
Published on

புதுப்பிக்கப்பட்ட கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை சென்னை கலைவாணா் அரங்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்துவைத்தார்.

என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச்சிலை ஜி.என்.செட்டி சாலை-திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999-இல் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலையோரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள கலைவாணரின் உருவச்சிலையை கலைவாணா் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்கும்படி கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினா் அரசிடம் கோரிக்கை வைத்தனா்.

இதை ஏற்று, சிலையை புதுப்பித்து சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

அதன்படி, சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில் ரூ. 50 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட உருவச்சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

தொடர்ந்து, கலைவாணரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன், சுவாமிநாதன், அன்பரசன், நடிகர் நாசர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Summary

Chief Minister Stalin unveiled the renovated Kalaivanar statue!

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
பிப். 28 - தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com