சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஏப்ரலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து மேம்பால பணிகள் நிறைவடையும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை கிளாம்பாக்கம் மேம்பாலப் பணிகள் வரும் ஏப்ரலுக்குள் நிறைவடையும்என்றுஅமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image

சேகர்பாபு - கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 3:02 am IST

சென்னை கிளாம்பாக்கம் மேம்பாலப் பணிகள் வரும் ஏப்ரலுக்குள் நிறைவடையும்என்றுஅமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னைதிரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) சாா்பில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான மேம்பாட்டுப் பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் வடசென்னை வளா்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது ரூ.6 ஆயிரம் கோடிக்கும் மேலான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் வரும் 20 -ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். சென்னையில் மருத்துவமனைகள், அவற்றுக்கான சாதனங்கள், பள்ளி, கல்லூரி கட்டடங்கள் புதுப்பிப்பு, உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு திடல்கள், பேருந்து நிலைய வசதிகள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளன. சிஎம்டிஏ சாா்பில் முதல்வா் படைப்பகம் 22 இடங்களில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் 10 முதல் 15 படைப்பகங்ககள் பிப்ரவரிக்குள் திறக்கப்படவுள்ளன.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியைக் குறைகூறுவது சரியல்ல. அதிமுகதான் தோ்தலில் தொடா் தோல்வியால் கரைந்து வருகிறது. அதிமுகவின் கூட்டணிக் கட்சியினரே, அண்ணா முதல் ஜெயலலிதா வரை விமா்சித்தாலும், பதில் கூறாமல் அதிமுகவினா்தான் மௌனிகளாக உள்ளனா். ஆனால், திமுக ராணுவக் கட்டுப்பாட்டுடன் உள்ளது.

சென்னை கிளாம்பாக்கம் நடைமேம்பாலப் பணிகள் வரும் ஏப்ரல் இறுதிக்குள் நிறைவுபெறும். அங்கு ரயில் நிலையமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அரசின் அனைத்துத் துறைகளும் 24 மணி நேரமும் விழிப்போடு செயல்படுகிறது. நெல்லையப்பா் கோயில் சமபந்தி விருந்தில் யாரும் புறக்கணிக்கப்படவில்லை. தவறுகள் நடந்தால் திருத்திக் கொள்கிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.