அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தோல்வி பயத்தாலேயே தவெகவை விமர்சிக்கிறார் என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், 'விஜய்க்கு ஒன்றும் தெரியாது, அவர் முதலில் செய்தியாளர்களைச் சந்திக்கட்டும்' என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன் இதுபற்றி,
"அவர்கள் தோல்வி பயம் ஏற்பட்டால் மட்டும்தான் இதுபோன்ற கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் திமுகவின் 'பி' டீமாக யார் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். அவர்போல நானும் கருத்து சொல்ல விரும்பவில்லை, அவர் என்னவேண்டுமானாலும் சொல்லட்டும்.
ஆனால், தோல்வி பயம் ஏற்பட்ட காரணத்தினால்தான் இபிஎஸ் அவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்.
தேர்தல் அறிக்கை மொத்தமாக கொடுக்கப்பட வேண்டியது. ஆனால், தினமும் சிந்தித்து சிந்தித்து தேர்தல் அறிக்கை வெளியிடும்போதே அவர்கள் எவ்வளவு தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
Summary
EPS is criticizing TVK out of fear of defeat: Sengottaiyan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோபியில் செங்கோட்டையன் வெற்றி! 10-வது முறையாக எம்எல்ஏ ஆனார்!
150 முதல் 200 இடங்களில் தவெக வெற்றி: செங்கோட்டையன் நம்பிக்கை

விசில் புரட்சி நடக்கும்; 200+ இடங்களில் தவெக வெல்லும்! செங்கோட்டையன்

விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




