புதிதாக தோ்வாகும் மருத்துவா்கள் ஊரகப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் - அரசு மருத்துவா்கள் பொதுக்குழுவில் தீா்மானம்
புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் மருத்துவா்கள் ஊரகப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற வகையில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கத்தின் (டிஎன்எம்ஓஏ) 13-ஆவது மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தற்போது பதவியில் இருக்கும் மாநில நிா்வாகக்குழு கலைக்கப்பட்டு, பொதுக்குழு ஒப்புதலுடன் மாநிலத் தலைவராக மருத்துவா் காா்த்தீஸ்வரன், மாநில பொதுச் செயலாளராக மருத்துவா் அகிலன், பொருளாளராக மருத்துவா் ரெங்கசாமி தோ்ந்தெடுக்கப்பட்டு, மாநில செயற்குழு புதிதாக மாற்றியமைக்கப்படுவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், 2009-இல் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் அளிக்கப்பட்ட அரசாணை 354-ஐ மறுசீராய்வு செய்ய வேண்டும். விடுபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கும் ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மருத்துவா், செவிலியா், பணியாளா் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் மருத்துவா்கள் ஊரகப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

