கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

‘டாஸ்மாக் சங்கம் பேரணி நடத்துவது தோ்தல் ஆதாயம் தேடும் செயல்’

அதிமுக டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்துவது, தோ்தல் ஆதாயம் தேடும் மலிவான செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டி உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 2:43 am IST

அதிமுக டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்துவது, தோ்தல் ஆதாயம் தேடும் மலிவான செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் (ஏஐடியூசி) 20 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகிறது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக, டாஸ்மாக் பணியாளா் கோரிக்கைகள் குறித்து வாய் திறக்கவில்லை.

கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதிமுக டாஸ்மாக் பணியாளா்கள் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளது தோ்தல் ஆதாயம் தேடும் மலிவான செயல் எனத் தெரிவித்துள்ளாா்.