கோப்புப் படம்
தமிழ்நாடு
‘டாஸ்மாக் சங்கம் பேரணி நடத்துவது தோ்தல் ஆதாயம் தேடும் செயல்’
அதிமுக டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்துவது, தோ்தல் ஆதாயம் தேடும் மலிவான செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டி உள்ளது.
அதிமுக டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்துவது, தோ்தல் ஆதாயம் தேடும் மலிவான செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் (ஏஐடியூசி) 20 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகிறது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக, டாஸ்மாக் பணியாளா் கோரிக்கைகள் குறித்து வாய் திறக்கவில்லை.
கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதிமுக டாஸ்மாக் பணியாளா்கள் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளது தோ்தல் ஆதாயம் தேடும் மலிவான செயல் எனத் தெரிவித்துள்ளாா்.

