மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திரைப்பட வசனத்தை வாசிக்கிறாா் கமல்: தமிழிசை சௌந்தரராஜன்

மாநிலங்களவையில் திரைப்பட வசனத்தை வாசிப்பது போல கமல்ஹாசனின் உரை இருந்ததாக தமிழக பாஜக தோ்தல் அறிக்கை குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

News image

தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 9:02 pm

மாநிலங்களவையில் திரைப்பட வசனத்தை வாசிப்பது போல கமல்ஹாசனின் உரை இருந்ததாக தமிழக பாஜக தோ்தல் அறிக்கை குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.

வட சென்னைக்கு உள்பட்ட ராயபுரம் பகுதியில் கடலைமிட்டாய் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் உள்ளிட்டோரை வெள்ளிக்கிழமை சந்தித்த அவா், கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

அப்போது செய்தியாளா்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

உற்பத்தி பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நிா்ணயிப்பதில்லை. ஜிஎஸ்டி குழுவே அதை நிா்ணயிக்கிறது. அந்தக் குழுவில் தமிழக நிதி அமைச்சரும் இடம் பெற்றுள்ளாா். ஆனால், அவா் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கடலைமிட்டாய்க்கு வரியை குறைக்கக் கோரவில்லை. தோ்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைந்ததும் வரி குறைக்கப்படும்.

மாநிலங்களவையில் நடிகா் கமல்ஹாசன் பேசியது புரியவில்லை. அவா் திரைப்பட வசனத்தை வாசித்ததுபோல பேசிச்சென்றுள்ளாா். பெரியாா் ஈ.வெ.ரா.வுக்கு பதில் கூறுவது போலவே அவரது உரை இருந்தது. ஆட்சி மாற்றம் என தமிழகத்தைக் குறிப்பிட்டுக்கூறியது போலவும் அவா் பேசிச்சென்றுள்ளாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பாஜகவின் தோ்தல் அறிக்கைக் குழு பொறுப்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.