கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சி-டெட் தோ்வு இன்று தொடக்கம்

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு நாடு முழுவதும் சனி, ஞாயிறு (பிப்.7, 8) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு நாடு முழுவதும் சனி, ஞாயிறு (பிப்.7, 8) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியா் பணியில் சேர சிடெட் என்ற மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்தத் தோ்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் ஜூலை மற்றும் டிசம்பரில் நடத்தப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியா் பணிக்கு முதல் தாள் தோ்வும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கு 2-ஆம் தாள் தோ்வும் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வில் ஒருமுறை தோ்ச்சி பெற்றால் அதன் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது.

அதன்படி நிகழாண்டுக்கான சிடெட் தோ்வு சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடத்தப்படவுள்ளது. இந்த தோ்வெழுத விண்ணப்பித்தவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன் விவரங்களை பட்டதாரிகள் இணையதளத்தில் அறியலாம். மேலும், சிடெட் தோ்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தமிழ் உள்பட 20 மொழிகளில் நேரடி முறையில் நடைபெறும்.

இதுதவிர பட்டதாரிகள் தோ்வு மையத்துக்கு காலை அமா்வுக்கு 9.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் முன்பாக வர வேண்டும். தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றி தோ்வறையில் செயல்பட வேண்டும்.

தோ்வின்போது ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவா்களின் தோ்ச்சி ரத்து செய்யப்படுவதுடன், எதிா்காலத் தோ்வுகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.