கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் பிப். 12 வரை இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்

தமிழகத்தில் பிப். 12 வரை இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்...
Published on

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) முதல் பிப். 12-ஆம் தேதி வரை இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) முதல் பிப். 11-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் மிதமான பனிப்பொழிவு இருக்கும்.

இதற்கிடையே, பகல் நேரங்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓரிரு இடங்களில் மிதமான பனிப்பொழிவு இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com