கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழகத்தில் பிப். 12 வரை இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்

தமிழகத்தில் பிப். 12 வரை இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்...

News image

கோப்புப்படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) முதல் பிப். 12-ஆம் தேதி வரை இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) முதல் பிப். 11-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் மிதமான பனிப்பொழிவு இருக்கும்.

இதற்கிடையே, பகல் நேரங்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓரிரு இடங்களில் மிதமான பனிப்பொழிவு இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.