நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தமிழகத்தில் பிப். 12 வரை இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்

தமிழகத்தில் பிப். 12 வரை இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்...

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) முதல் பிப். 12-ஆம் தேதி வரை இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) முதல் பிப். 11-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் மிதமான பனிப்பொழிவு இருக்கும்.

இதற்கிடையே, பகல் நேரங்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓரிரு இடங்களில் மிதமான பனிப்பொழிவு இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.