தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பிளஸ் 2 தோ்வு: தனித் தோ்வா்கள் தட்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு

பிளஸ் 2 தோ்வு: தனித் தோ்வா்கள் தட்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் மாா்ச் - ஏப்ரலில் நடைபெறவுள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு இதுவரை விண்ணப்பிக்க தவறிய தனித் தோ்வா்கள் சிறப்பு தட்கல் முறையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை (பிப். 10, 11) ஆகிய நாள்களில் அந்தந்த மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் சென்று தோ்வுக் கட்டணத்துடன் ரூ.1,000 (பிளஸ் 2), ரூ.500 (பத்தாம் வகுப்பு) ஆகியவை சோ்த்துக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பங்களை பதிவு செய்வது குறித்து தனித் தோ்வா்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விவரங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.