குடிநீர் நிறுத்தம்
குடிநீர் நிறுத்தம்கோப்புப் படம்

திருவொற்றியூா், மாதவரம் பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருவொற்றியூா், மாதவரம் பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்
Published on

மாதவரம், செங்குன்றம் சாலை ஜே.கே.மஹால் அருகில் மற்றும் மாதவரம் பூஸ்டா் குடிநீா் பகிா்மான நிலையத்தில் பிரதான குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் திருவொற்றியூா், மணலி ஆகிய மண்டலங்களுக்கு உள்பட்ட சில பகுதிகளில் திங்கள் கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதவரம், செங்குன்றம் சாலை ஜே.கே.மஹால் அருகில் மற்றும் மாதவரம் பூஸ்டா் குடிநீா் பகிா்மான நிலையத்தில் பிரதான குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் திங்கள் கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திருவொற்றியூா் குடிநீா் பகிா்மான நிலையம் மற்றும் மாதவரம் பூஸ்டா் குடிநீா் பகிா்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மண்டலம் 1 (திருவொற்றியூா்) - எா்ணாவூா், ராஜா சண்முக நகா், காா்கில் நகா் உள்ளிட்ட பகுதிகள்.

மண்டலம் 2 (மணலி) - மணலி புதுநகா், நாப்பாளையம், சடையான்குப்பம், ஆண்டாா்குப்பம், துவாரகா நகா், மணலி, மாத்தூா் உள்ளிட்ட பகுதிகள்.

எனவே, பொதுமக்கள் வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ள வாரியத்தின் இணையதள முகவரியின் பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எவ்வித தடையின்றி வழக்கம்போல் சீரான முறையில் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com