பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

குரூப்-2, 2ஏ தேர்வுகள் ரத்து.. தேர்வர்கள் மறியல் - போராட்டம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைப் பற்றி...

News image

போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள்.

Updated On :8 பிப்ரவரி 2026, 11:23 am IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதால் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3 ஆகிய குரூப்-2ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று (பிப்.8) காலை நடைபெறவிருந்தது.

தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வுகள் இன்று நடைபெறவிருந்த நிலையில், குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நந்தனம், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி உள்ளிட்ட 7 தேர்வு மையங்களில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து தேர்வர்கள் போராட்த்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கு தேர்வு நடத்தும் அதிகாரிகளுடன் 700-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கல் தேர்வர்களை அங்கிருந்து அமைதியாக கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

Summary

Following the postponement of the TNPSC Group 2 and 2A main examinations across Tamil Nadu, candidates staged a protest in Poonamallee, Chennai on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.