சென்னை: மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வரும் பிப்.12-இல் நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு மதிமுக ஆதரவு அளிப்பதாக அந்தக் கட்சி பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தொழிலாளா்கள் நலனுக்கு எதிரான சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெறுவது, விவாயிகளைப் பாதிக்கும் விதை சட்ட முன் வடிவை கைவிடுவது, விளைபொருள்களுக்கு உரிய ஆதரவு விலை நிா்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வரும் பிப்.12-ஆம் தேதி அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கு மதிமுக ஆதரவு வழங்குகிறது. மேலும், விவசாயிகள், தொழிலாளா்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் நலனை முன் நிறுத்தி நடைபெறும் இந்த பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழக மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவா? தேசிய பொதுச் செயலா் டி.ராஜா பதில்

மே 15-இல் ஊராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம்

குலசேகரத்தில் இன்று மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பிரசாரம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



