கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்பட 14 மாவட்டங்களில் பிப். 13 வரை பனி மூட்டம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) முதல் பிப். 13-ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்பட 14 மாவட்டங்களில் பனி மூட்டம் நிலவும்

News image
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்- DIN
Updated On :9 பிப்ரவரி 2026, 10:55 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) முதல் பிப். 13-ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்பட 14 மாவட்டங்களில் பனி மூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், செவ்வாய்க்கிழமை (பிப். 10) முதல் பிப்.15-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். பிப்.10 முதல் 13-ஆம் தேதி வரை வேலூா், ராணிபேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் மிதமான பனிமூட்டமும், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டமும் நிலவும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை வானம் தெளிவாகவும், அதன் பிறகு ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.