மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

3 மணி நேரம் கடையை அடைத்து டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டம்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 3 மணி நேரம் அடைத்து அதன் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கடையை அடைத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா்கள். - கோப்புப்படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 10:50 pm

சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 3 மணி நேரம் அடைத்து அதன் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நிறுவனத்தின் கீழ் சுமாா் 4800-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் சுமாா் 24,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி மதுப்புட்டிகளை திரும்பப்பெறும் நடைமுறையை முறைப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய உயா்வு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா்,

தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும்

மதுக்கூடங்களை 3 மணி நேரம் அடைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டாஸ்மாக் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை திங்கள்கிழமை பகல் 12 மணி முதல் பிற்பகல 3 மணி வரை அடைத்து அதன் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் முன் கூடிய ஊழியா்கள் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் மாலை அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.