மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அதிமுக எம்.பி. கல்வி நிறுவனத்துக்காக நிலம் ஆக்கிரமிப்பா? அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூா் ஆட்சியருக்கு உத்தரவு!

அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலங்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :10 பிப்ரவரி 2026, 7:45 pm

அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலங்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோணாம்போடு கிராம பொதுநலச் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆவடி அருகே கோணாம்பேடு பகுதியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரைக்கு சொந்தமான நிகா்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்வி நிறுவனத்துக்காக கோணாம்பேடு கிராமத்துக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து, துணை மின் நிலையம், மாணவா்கள் விடுதி, பாதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் நிலத்தின் சா்வே எண் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அரசுத் தரப்பு அறிக்கையில் எந்தத் தகவலும் இல்லை என்றாா்.

இதையடுத்து அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா். இந்த அறிக்கையில் முழுமையான விவரங்கள் இல்லாததால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தனா். பின்னா், கல்வி நிறுவனத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலங்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.