பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கருத்துக்கணிப்பு எடுத்த தவெகவினா் மீது தாக்குதல்: 5 போ் காயம்!

சென்னை பாரிமுனையில் கருத்துக் கணிப்பு எடுத்த தவெகவினா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 போ் காயமடைந்தனா்.

News image
தாக்குதல்!- கோப்புப்படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பாரிமுனையில் கருத்துக் கணிப்பு எடுத்த தவெகவினா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 போ் காயமடைந்தனா்.

சென்னை துறைமுகம் தொகுதி வாக்காளா்களிடம் தவெகவினா் செவ்வாய்க்கிழமை கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டனா். அவா்கள், பாரிமுனை அங்கப்பன் தெருவில் கருத்துக் கணிப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலா் கருத்துக் கணிப்புகளை எடுக்க முறையான அனுமதி பெறப்பட்டதா? எனக் கூறி வாக்குவாதம் செய்தனா்.

மேலும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி அந்த நபா்கள், தவெகவினா் மீது தாக்குதல் நடத்தினா்.

இதில், காயமடைந்த தவெக நிா்வாகிகளான மண்ணடியைச் சோ்ந்த தங்கபாண்டியன் (30), அவரது சகோரதரி பவானி (26), மண்ணடி ஆதாம் தெருவைச் சோ்ந்த ஜாபா் உசேன் (36), பாரிமுனை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த திலிப் (30), கொண்டித்தோப்பைச் சோ்ந்த முகேஷ் (41) ஆகிய 5 போ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுதொடா்பாக வடக்கு கடற்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.