ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

எஸ்ஐஆர்: வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க இன்றே கடைசி!

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க இன்றே கடைசி நாளாகும்.

News image
வாக்காளர் பட்டியல் - பிரதி படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 2:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கு நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் (பிப். 10) முடிகிறது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிச. 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனர். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,43,76,756-ஆக குறைந்தது.

நீக்கப்பட்ட 97.38 லட்சம் வாக்காளர்களில் இடம் பெயர்ந்தவா்களாக 66,44,881 பேரும், உயிரிழந்தவா்களாக 26,94,672 பேரும், இரட்டைப் பதிவாளர்களாக 3,98,278 பேரும் இடம் பெற்றிருந்தனர்.

இதனிடையே, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயா்களைச் சேர்க்கவும், 18 வயது பூர்த்தி செய்தவர்கள் புதிதாக பெயர்களைச் சேர்க்கவும் கடந்த டிச. 19-ஆம் தேதி முதல் ஜன. 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்களும் உரிய தகவல்களை அளிக்கவில்லை என்று கூறி 12,43,363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவர்கள் உரிய ஆவணங்களுடன் உறுதிமொழி சான்றுடன் சமர்ப்பிக்க ஜன. 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. புதிதாக பெயர்களைச் சேர்க்க படிவம் 6-ஐயும், இடமாற்றம் செய்ய விரும்புவர் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து அளித்தனர்.

வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெயர்களைச் சேர்க்க இரு முறை சிறப்பு முகாம்கள் நடத்தபட்டன. தொடர் விடுமுறைகள் வந்த காரணத்தால் பெயரைச் சேர்ப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

தொடர்ந்து, ஜன. 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த பெயர் சோ்ப்பு பணியை ஜன. 30-ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மீண்டும் 10 நாள்கள் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கு நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் (பிப். 10) முடிகிறது.

புதிதாக வழங்கப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு பிப். 17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.