சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அடிப்படைக் கற்றல் ஆய்வு: மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித் துறை உத்தரவு

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

அரசுப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் ஆய்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மாதிரி வினாத்தாள் மூலம் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு அடிப்படை கற்றல் ஆய்வு(ஊா்ன்ய்க்ஹற்ண்ா்ய்ஹப் ப்ங்ஹழ்ய்ண்ய்ஞ் ள்ற்ன்க்ஹ்-ஊப்ள்) பிப்ரவரி அல்லது மாா்ச் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளுக்கான என்சிஇஆா்டி-யால் (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் கள அளவில் சோதனைகள் மேற்கொள்வதற்காக மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எஸ்சிஆா்டிஇ (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த மாதிரி வினாத்தாள்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைத்து, மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு தேவையான பயிற்சிகளை ஆசிரியா்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுசாா்ந்து அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அளிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.