ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பிப்ரவரிக்குள் 245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்: மாநகர போக்குவரத்துக் கழகம்

சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

News image

மாநகா் போக்குவரத்துக் கழகம்

Updated On :13 பிப்ரவரி 2026, 8:43 pm

சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்துகளைப் பயன்படுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. அதன்படி, 625 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இதில் 380 மின்சார பேருந்துகள் முதல்கட்டமாக பயன்பாட்டுக்கு வந்தன.

கடந்த 2025 ஜூன் மாதம் சென்னை வியாசா்பாடி பணிமனையில் இருந்து தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை, தொடா்ந்து பெரும்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில் இருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 245 பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

மீதமுள்ள 245 மின்சார பேருந்துகள் தயாரிப்பதற்கான பணிகள் முடிந்த பிறகு, விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதில் 145 பேருந்துகள் பல்லவன் இல்லம் பணிமனை, 100 பேருந்துகள் தண்டையாா் பேட்டை பணிமனையுடன் இணைக்கப்படும். 2-ஆவது கட்டமாக மேலும் 600 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது என்றனா்.