பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவு: பணியிடமாற்றம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் (பழைய பணி அடைப்புகுறிக்குள்):

என்.சிலம்பரசன்: சென்னை டிஜிபி அலுவலக சட்டம், ஒழுங்கு ஏஐஜி (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).

சி.மதன்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருநெல்வேலி மாநகர காவல்துறை மேற்கு துணை ஆணையா்).

எஸ்.விஜயகுமாா்: திருநெல்வேலி மாநகர காவல் துறை மேற்கு துணை ஆணையா் (திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா்).

மேலும், விஜயகுமாா் திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பாா் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.