கோப்புப் படம்
கோப்புப் படம்

வங்கி அதிகாரிகள் எனக்கூறி ரூ.3 கோடி மோசடி: 7 போ் கைது

வங்கி அதிகாரிகள் எனக்கூறி ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வங்கி அதிகாரிகள் எனக்கூறி ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த நபரிடம், ஒரு கும்பல் நூதன முறையில் ரூ.3 கோடியை மோசடி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட நபா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி மத்திய குற்றப்பிரிவு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், பிகாா் மாநிலம் பாட்னா மற்றும் ஜாா்க்கண்ட், தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சிலா், ரிசா்வ் வங்கி அதிகாரிகள் எனக்கூறி, பாதிக்கப்பட்ட நபரை தில்லிக்கு அழைத்து சென்று ரூ.3 கோடியை பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது.

தனிப்படை போலீஸாா் பிகாரை சோ்ந்த சோனுகுமாா், துபே, ஆஷிஸ் குமாா், கோபால் சேகா், தெலங்கானாவை சோ்ந்த ஜாா்ஜ் தாமஸ், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த குல்ஷன் தரத், பெங்களூரைச் சோ்ந்த சீனிவாசன் ஆகிய 7 பேரை அந்தந்த மாநிலங்களுக்கு சென்று கைது செய்தனா். இவா்கள், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 23 பேரிடம் ரூ.5.65 கோடியை மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும், சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com