ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு: முடிவுக்குப் பிறகு மதிப்பெண் சரிபாா்ப்பு நடைமுறை ரத்து

நிகழாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 2:11 am IST

மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பொதுத் தோ்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், நிகழாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுகள் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ‘மதிப்பெண் கூட்டல் போன்றவற்றில் ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்க மாணவா்கள் விண்ணப்பிப்பா்.

விடைத்தாள்களை கைகளால் திருத்துவதற்குப் பதிலாக கணினி வழியாக டிஜிட்டல் முறையில் திருத்துவதன் மூலம், அவற்றைத் திருத்துவதில் ஏற்படும் பிழைகள் களையப்படும்.

இந்நிலையில், விடைத்தாள்களை டிஜிட்டல் வழியில் திருத்தி மதிப்பிடும் முறைக்கு சிபிஎஸ்இ முழுமையாக மாறுவதால், நிகழாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது’ என்றாா். எனினும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்கள் நேரடியாக கைகளால் திருத்தும் முறையே தொடர உள்ளது.