திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் வீட்டில் சோதனை

சென்னை பெருநகர காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வீட்டில் ஊழல் ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 8:12 pm

சென்னை பெருநகர காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வீட்டில் ஊழல் ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

சென்னை பெருநகர காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ராஜலட்சுமி. இவா், குடும்பத்துடன் திருமங்கலம், வெல்கம் காலனியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இவரது வீட்டுக்கு ஊழல் ஒழிப்பு பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். 4 மணி நேர சோதனைக்குப் பிறகு சில ஆவணங்களைக் கையோடு எடுத்துச் சென்ாக கூறப்படுகிறது. காவல் ஆய்வாளா் ராஜலட்சுமி மீது வந்த தொடா்ச்சியாக வந்த புகாரின் அடிப்படையில், இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக ஊழல் ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்.