காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சேலத்தில் இன்று தவெக பிரசார கூட்டம்! சரியான நேரத்துக்குள் வந்த விஜய்

சேலத்தில் இன்று தவெக பிரசார கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சரியான நேரத்துக்குள் விஜய் வருகை தந்துள்ளார்.

News image

சேலம் வரும் விஜய் - கோப்புப்படம் - DPS

Updated On :13 பிப்ரவரி 2026, 12:13 pm IST

சேலத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டு வரும் நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்தில் விஜயைக் காண ஏராளமானோர் திரண்டிருக்கிறார்கள்.

ஓமலூர் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக தவெக தலைவர் விஜய் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏராளமான தொண்டர்கள் சாலையில் காத்திருப்பதால் அவர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், சரியாக 12.25 மணிக்குள்ளாக கூட்டம் நடைபெறும் இடத்துக்கு விஜய் வந்தடைந்தார்.

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் பங்கேற்க சேலம் சென்று கொண்டிருக்கும் விஜயை பார்க்க சாலைகளில் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து ஓமலூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலை வழியாக விஜய் சென்றடைந்தார்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் விஜயைக் காண தவெகவினர் பலர் அங்கே காத்து நின்றனர். அங்கிருந்த தொண்டர்களை அப்புறப்படுத்திவிட்டு வாகனங்களுக்கு வழி விட போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்டோர் கடும் முயற்சி மேற்கொண்டனர்.

ஓமலூர் விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடைபெறும் வளாகத்துக்கு வர அரை மணி நேரம் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், மிகச் சரியாக கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தார் விஜய்.

ஏற்கனவே, க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு இருப்பவா்களுக்கு மட்டுமே இன்று நடைபெறும் கூட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தெரிவித்திருந்தார். ஆனாலும் ஏராளமானோர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளியே காத்திருக்கிறார்கள்.

முன்னதாக கூட்டம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், காவல் துறையினரினா் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் முறையாக செய்யப்பட்டுள்ளன. க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 போ் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

நுழைவுச்சீட்டு இல்லாதவா்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டு பெறாத தொண்டா்களும், மக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.