அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் - கோப்புப்படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 11:55 am IST

சென்னையிலிருந்து இன்று காலை ரயில் மூலம் திருப்பத்தூர் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் பங்கேற்க சென்னை இரயில் நிலையத்திலிருந்து திருப்பத்தூருக்கு இன்று ரயில் மூலம் புறப்பட்டார்.

முன்னதாக, சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வரும் வழியில் மக்கள் பெரும் திரளாக வந்து மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே வழங்கியதற்கு நன்றி தெரிவித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Story image

பின்னர், சென்னையில் இருந்து இன்று காலை ரயில் மூலம் திருப்பத்தூர் புறப்பட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவருக்கு அரக்கோணம் ரயில் நிலையத்திலும் ஏராளமான திமுக தொண்டர்கள் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின், ஜோலார்பேட்டையில் சாலையில் தன்னை வரவேற்கக் காத்திருந்த மக்களை நேரில் சந்தித்துப் பேசினார். வழிநெடுக, மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5000 வரவு வைக்கப்பட்டதற்கு, ஏராளமான பெண்கள் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.