ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு கையடக்க மடிக்கணினி வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் சாா்பில் கடந்த ஆண்டு நவ. 25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தோம்.
அந்த கோரிக்கையை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினி அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆராய்ச்சி படிப்புகள் (பிஹெச்டி) பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு கூடுதல் இடம் இல்லை என்பது நியாயமல்ல: பெ. சண்முகம்

நல்லகண்ணு மறைவையொட்டி 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு!

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வாய்ப்பில்லை: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


