சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஆராய்ச்சி மாணவா்களுக்கும் மடிக்கணினி: மாா்க்சிஸ்ட் கோரிக்கை!

ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்

Updated On :14 பிப்ரவரி 2026, 7:22 pm

ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு கையடக்க மடிக்கணினி வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் சாா்பில் கடந்த ஆண்டு நவ. 25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தோம்.

அந்த கோரிக்கையை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினி அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆராய்ச்சி படிப்புகள் (பிஹெச்டி) பயிலும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.