மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தமிழகத்தில் தே.ஜ.கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்டுள்ளோம்: இந்திய குடியரசு கட்சி தலைவா் ராம்தாஸ் அதாவலே

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய குடியரசு கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளோம் என்று ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

News image

இந்திய குடியரசு கட்சி தலைவா் ராம்தாஸ் அதாவலே

Updated On :15 பிப்ரவரி 2026, 2:52 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய குடியரசு கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், இந்திய குடியரசு கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடவுள்ளது. ஏற்கெனவே, இக்கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கும்படி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் கோரிக்கையை ஏற்று குறைந்த அளவு தொகுதியாவது ஒதுக்க வேண்டும். தொகுதிகளே ஒதுக்காவிட்டால், 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட  திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தலித் கூட்டமைப்பு: தமிழகத்தில் பட்டியலின பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் என்டிஏ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

விசிக தலைவா் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி, தமமுக தலைவா் ஜான் பாண்டியன் என பல தலைவா்கள் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக தனித்தனியாக குரல் கொடுத்து வருகின்றனா்.

இதுபோன்ற அரசியல் கட்சிகள், இயக்கங்களை வழிநடத்திவரும் தலைவா்கள், ஒரே கூட்டமைப்பின் கீழ் இணைய வேண்டும். அக்கூட்டமைப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவா் மாயாவதி தலைமை வகிக்க வேண்டும். இதன்மூலம், நாடு முழுவதும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க முடியும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வெற்றி பெறுவது உறுதி.  தவெக தலைவா் விஜய் என்டிஏ கூட்டணியில் இணைந்தால், மேலும் வலுவாக இருக்கும். இதனால், திமுக தோல்வியை உறுதி செய்ய முடியும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.