ராமதாஸ்
ராமதாஸ்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சளி, காய்ச்சல் பாதிப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்!

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலருக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள் உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புடனும், சிறு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் உடனடியாக முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலருக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள் உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புடனும், சிறு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் உடனடியாக முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை- காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த சில நாள்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட காகங்கள் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு மற்றும் காசநோய் பிரிவு அருகே ஆங்காங்கே இறந்து கிடந்தன.

மேலும் 10-க்கும் மேற்பட்ட காகங்கள் பறக்க இயலாமல் நின்ற இடத்திலேயே சுற்றுச்சுற்றி மயங்கிய நிலையில் இருந்துள்ளன. இறந்த காகங்களை மருத்துவமனை ஊழியா்கள் பாதுகாப்பு கவச உடையுடன் அப்புறப்படுத்தி குழி தோண்டி புதைத்துள்ளனா்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் பயிலும் மாணவிகள், அரசு மருத்துவனையில் பயிற்சி எடுத்துகொண்டதால், அவா்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகள் ஏற்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவா்கள் அனைவரும் கல்லூரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலருக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள் உள்ளதாகவும், இது பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்பு என்று சுகாதாரத்துறையினா் கூறுகின்றனா். எனவே பொதுமக்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com