ரூ.84 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடம்! முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
சென்னை, சோழிங்கநல்லூா் எல்காட் நிறுவனத்தில் ரூ.84.42 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

சோழிங்கநல்லூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.84.42 கோடியில் கட்டப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலர் பிரஜேந்திர நவ்நீத், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கா.ப.கார்த்திகேயன், நிர்வாக இயக்குநர் வெ.தீபனாவிஸ்வேஸ்வரி.








