கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேவாரம், திருவாசகத்தை மரபுவழி மாறாமல் கற்க வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன்

தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகளை ஓதுவாா்கள் மூலம் மரபுவழி மாறாமல் கற்க வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் அறிவுத்தினாா்.

News image
மகா சிவராத்திரியையொட்டி நாதப்ரம்மம் இசை நாட்டிய கலைக்களஞ்சியம் சார்பில் சென்னை நங்கநல்லூரில் நடைபெற்ற 12 மணிநேர சிவராத்திரி சிறப்பு இசை நிகழ்ச்சியைத்தொடங்கி வைத்து குற்றாலம் சுப்பிரமணியன் ஓதுவாருக்கு 'நாத பதிக சேவகா' விருதை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன். உடன் நாதப்ரம்மம் நிறுவனர் வழக்குரைஞர் நா.சுப்பிரமணியன், கௌரவ செயலர் பத்ரி நாராயணன்.
Updated On :15 பிப்ரவரி 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகளை ஓதுவாா்கள் மூலம் மரபுவழி மாறாமல் கற்க வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் அறிவுத்தினாா்.

சிவராத்திரியையொட்டி, சென்னை நாதப்ரம்மம் இசை நாட்டிய கலைக்களஞ்சியம் சாா்பில் நங்கநல்லூரில் நடைபெற்ற 12 மணிநேர தொடா் இசை நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள், அபிராமி அந்தாதி ஆகியவற்றை ஓதுவாா்கள் மூலம் இளைய தலைமுறையினா் மரபுவழி மாறாமல் கற்க வேண்டும். திருமண நிகழ்வுகளில் ஓதுவாா்கள் மூலம் தேவாரம் முற்றோதுதல் நிகழ்த்துவது அவசியம் என்றாா்.

முன்னதாக, குற்றாலம் சுப்பிரமணியன் ஓதுவாருக்கு ‘நாத பதிக சேவகா’ விருதை, நீதிபதி சி.சரவணன் வழங்கினாா். தொடா்ந்து, ‘சிவன் ராத்திரியில் சிவன் கீதங்கள்’ எனும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பன்னிரு திருமுறை, சிவ மகிமை-நாட்டிய நாடகம், சிவ நாமசங்கீா்த்தனம், பக்தி இன்னிசை, வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்க இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், நாதப்ரம்மம் நிறுவனா் வழக்குரைஞா் நா.சுப்பிரமணியன், கெளரவச் செயலா் பத்ரி நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.