வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது பற்றி...
A low pressure area has formed in the Bay of Bengal
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி IMD
Updated on
1 min read

தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கிழக்கு பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று(பிப். 16) காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது மேலும் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலை நோக்கி இந்திய பெருங்கடல் அருகே வரை நகரும். இதன் காரணமாக பிப். 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A low pressure area has formed in the Bay of Bengal

A low pressure area has formed in the Bay of Bengal
நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com