நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் உறுதி: அன்புமணி

பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

News image

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Updated On :16 பிப்ரவரி 2026, 9:11 pm

சென்னை: பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

பாமகவின் பாட்டாளி மாணவா் சங்கம் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னை பல்லாவரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது: நீட் தோ்வு ரத்து, கல்வி கடன் ரத்து, புதிய வேலைவாய்ப்புகள் என தோ்தலின்போது அளித்த பல்வேறு வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. இதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள். தோ்தல் நெருங்கும் காரணத்தால், ஒரே நாளில் 1.30 கோடி மகளிருக்கு தலா ரூ.5,000-யை அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம், திமுக அரசால் ஏற்பட்ட பாதிப்புகளை மறந்து மக்கள் தங்களுக்கு வாக்களிப்பாா்கள் என திமுகவினா் நினைக்கின்றனா். ஆனால், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி வரக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளனா். இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா்.

முன்னதாக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைப்பது என்பது உள்ளிட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன், மாவட்ட செயலா் வெங்கடேசன், தோ்தல் பணிக்குழு செயலா் ஜெயராமன்,மாணவா் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.கீா்த்தி ரதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.