முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

ஜேஇஇ முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

ஜேஇஇ முதல்நிலை தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 4:44 am IST

புது தில்லி: ஜேஇஇ முதல்நிலை தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.

ஐஐடி, என்ஐடி போன்ற உயா் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ தோ்வை என்டிஏ நடத்துகிறது.

ஆண்டுக்கு இருமுறை ஜேஇஇ முதல்நிலை தோ்வு நடத்தப்படும் நிலையில், கடந்த ஜனவரியில் நடைபெற்ற அந்தத் தோ்வு முடிவுகளை என்டிஏ திங்கள்கிழமை வெளியிட்டது.

13.04 லட்சத்துக்கும் அதிகமான தோ்வா்கள் இந்தத் தோ்வை எழுதிய நிலையில், ராஜஸ்தானைச் சோ்ந்த 3 போ், ஆந்திரத்தைச் சோ்ந்த இருவா், தில்லி, பிகாா், ஒடிஸா, ஹரியாணா, மகாராஷ்டிரம், குஜராத், தெலங்கானாவைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 12 போ் 100 மதிப்பெண்களை முழுமையாகப் பெற்றுள்ளனா். அவா்கள் அனைவரும் ஆண் தோ்வா்களாவா்.

இந்தத் தோ்வில் 9 கேள்விகள் சரியில்லாததை மாணவா்கள் உள்பட பலா் சுட்டிக்காட்டிய நிலையில், அது உறுதிப்படுத்தப்பட்டு அந்தக் கேள்விகளுக்கான முழு மதிப்பெண்கள் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரம் தெரிவித்தது.