சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சமஸ்கிருதம் யாருக்கும் தாய் மொழியாக இருக்காது! அமர்நாத் ராமகிருஷ்ணன்

சமஸ்கிருதம் குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியது பற்றி...

News image
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்
Updated On :16 பிப்ரவரி 2026, 4:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

சமஸ்கிருதம் என்பது உருவாக்கப்பட்ட மொழி, அது யாருக்கும் தாய்மொழியாக இருக்காது என்று இந்திய தொல்லியல்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமர்நாத் ராமகிருஷ்ணன் நேற்று உரையாற்றினார்.

இந்த விழாவில் சமஸ்கிருதம் குறித்து அவர் பேசியதாவது:

”தமிழி என்ற எழுத்து எகிப்தியர்களின் கல்லறைகளிலும் கிடைக்கிறது என்று வெளிநாட்டு அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 30 இடங்களில் தமிழில் எழுத்துகள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக சிகை கொற்றன் என்ற எழுத்து எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அந்த கொற்றன் என்ற எழுத்து நமது புகலூர் அகழாய்வில் கிடைத்துள்ளது.

தமிழகத்திலிருந்து எகிப்து சென்று வியாபாரம் செய்துள்ளார்கள். அப்போது அவர்கள் தங்களின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்கள். தற்போது சிகை கொற்றன் என்ற வார்த்தை வைரலாகி வருகின்றது. சிகை என்பது சமஸ்கிருத வார்த்தை என்கிறார்கள்.

சமஸ்கிருதம் என்பது உருவாக்கப்பட்ட மொழி, அது யாருக்கும் தாய்மொழியாக இருக்காது. ஏனென்றால் ஒரு பெண் பேச முடியாத மொழி நிச்சயமாக தாய்மொழியாக இருப்பது சாத்தியமே கிடையாது.

மொழி என்பது பெண்ணிடம் இருந்துதான் தோன்றும். பெண்ணிடம் இருந்து தோன்றும்போதுதான் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் சமமாகப் போகும். சமஸ்கிருதம் என்பது மதச் சடங்கு மொழி, கடவுளைப் போற்றுவதற்காக இயக்கப்பட்ட, தொகுக்கப்பட்ட மொழி. அது ஆணுக்கும் ஆணுக்கும் இடையே மட்டும்தான் பயன்படும்.

தமிழில் உள்ள சொற்களை எடுத்துக் கொண்டு சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆகையால் சிகை என்ற வார்த்தை தமிழில் இருந்து வந்ததா என்பதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். நிச்சயம் தமிழ் மொழி என்பதுதான் விடையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.