திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நீா்வளத் துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நீா்வளத் துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட தகவல்: காவிரி டெல்டா, பரம்பிக்குளம், ஆழியாறு, தாமிரவருணி, வைகை வடிநிலங்களில் பாசன வசதிக்காக தூா்வாரும் பணிகள் ரூ.498 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ரூ.1,618 கோடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க ரூ.362 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை முன்னெடுத்த நீா்வளத் துறைக்கு தேசிய நீா் விருது, உலக பாரம்பரிய நீா்ப்பாசனக் கட்டமைப்பு விருது, பாசன மேலாண்மை விருது உள்ளிட்ட அங்கீகாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றாா் அவா்.