சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பெருந்தன்மை வேண்டாம்; நியாயத்தை மட்டுமே கோருகிறோம்: தங்கம் தென்னரசு

பெருந்தன்மை வேண்டாம், நியாயத்தை மட்டுமே கோருகிறோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

News image
இடைக்கால பட்ஜெட்
Updated On :17 பிப்ரவரி 2026, 7:33 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: மத்திய அரசிடம் பெருந்தன்மையை எதிர்பார்க்கவில்லை, சமநிலையினை உறுதி செய்யும் நியாயத்தை மட்டுமே கோருகிறோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட் நிறைவாக சில கவலைகளை வெளியிட்டிருந்தார்.

அதில், மாநிலங்களுக்கிடையிலான கிடைமட்டப் பகிர்வில், மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு உரிய நியாயமான பங்கு வழங்கப்படாமல் நிதிக்குழு பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளது.

ஒன்பதாவது நிதிக்குழு காலத்தில், தமிழ்நாட்டிற்கான பங்கு 7.931 சதவீதமாக இருந்த நிலையில், தொடர்ந்து வந்த நிதிக் குழுக்கள் அதனைக் குறைத்து வந்தன.

இந்தப் பங்கு அண்மையில் 4.079 சதவீதமாகக் குறைந்ததால் தமிழகத்துக்கு 3.17 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது, தமிழ்நாடு அரசின் நிலுவைக் கடனில் சுமார் 33 சதவீதத்திற்குச் சமமானதாகும்.

நிலை இவ்வாறு இருக்க, பதினாறாவது நிதிக்குழு பரிந்துரைகளில், நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு முறையே 23.74 மற்றும் 13.27 சதவீத அளவில் உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வெறும் 0.44 சதவீதம் என்ற மிகச் சிறிய உயர்வே வழங்கப்பட்டுள்ளது;

இது, ஒப்பிடத்தக்க மாநிலங்களுள் மிகவும் குறைவானதாகும். நாம் பெருந்தன்மையை எதிர்பார்க்கவில்லை. சமநிலையினை உறுதி செய்திடும் நியாயத்தை மட்டுமே கோரியிருந்தோம் என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.

பதினாறாவது நிதிக்குழுவும் அந்த வகையில் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.