

திருப்பரங்குன்றம் : தமிழகத்தில் அரசு சார்பில் மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வழங்கப்பட்டதை வரவேற்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னைக்கு செல்வதற்காக திங்கள்கிழமை மதுரை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு சார்பில் மகளிருக்கு உரிமைத்தொகையாக தலா ரூ.5,000 கொடுத்ததை வரவேற்கிறோம். மாறுபட்ட கருத்து சொன்னால் பெண்கள் கோபப்படுவார்கள் என்றார்.
தை மாதம் முடிந்து, மாசி பிறந்துவிட்டது, கூட்டணி அறிவிப்பு எப்போது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பொறுமையாக இருங்கள்' என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.