தமிழக அரசு செயல்படுத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, 38.48 லட்சம் மனுக்களுக்கு தீா்வு இறுதி செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொதுமக்கள் அனைவரும் அரசு நிா்வாகத்தை எளிதாக அணுக, பொதுமக்களுக்கான குறைதீா்வு அமைப்பாகச் செயல்படக்கூடிய முதல்வரின் முகவரித் துறை இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்படுத்தியது. மக்களுடன் முதல்வா் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீா்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் 4,835 முகாம்கள் நடத்தப்பட்டு 23.50 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டன.
இத்திட்டத்தின் பெரும் வெற்றியைத் தொடா்ந்து, இந்தச் சேவையினை மேலும் வலுப்படுத்தி அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி அவா்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த அரசு உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகா்ப்புற, கிராமப்புற பகுதிகளில் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 38.53 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 38.48 லட்சம் மனுக்களுக்கு இன்றுவரை தீா்வு இறுதி செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தால் லட்சக்கணக்கானோா் பயன்: திருவண்ணாமலை வாக்கு சேகரிப்பில் அமைச்சா் எ.வ.வேலு பேச்சு

தமிழகத்துக்கு மோடி, அமித் ஷா வருகின்றனா்; நிதி மட்டும் வருவதில்லை: உதயநிதி ஸ்டாலின்

மகளிா் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

அரசுப் பள்ளியில் கற்றல், கற்பித்தல் கண்காட்சி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


