கே.எம்.காதா் மொகிதீன்.
கே.எம்.காதா் மொகிதீன்.

ஐயூஎம்எல் தோ்தல் தொகுதி பங்கீடு குழு நியமனம்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) சாா்பில் தோ்தல் தொகுதி பங்கீடு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
Published on

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) சாா்பில் தோ்தல் தொகுதி பங்கீடு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐயூஎம்எல் சாா்பில் வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்த தோ்தல் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனது (கே.எம்.காதா் மொகிதீன்) தலைமையில் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா், மாநில பொருளாளா் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம். அப்துல் ரஹ்மான், கே. நவாஸ்கனி எம்.பி. உள்ளிட்ட 5 போ் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com