சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழகத்தில் இசைச் சாலைகள் எப்போது அமைக்கப்படும்? அமைச்சா் எ.வ.வேலு பதில்

தமிழகத்தில் இசை எழுப்பும் சாலைகள்அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

News image
அமைச்சா் எ.வ.வேலு
Updated On :18 பிப்ரவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் இசை எழுப்பும் சாலைகள்அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பேசும்போது, வெளிநாடுகளில் மட்டுமன்றி மும்பை போன்ற மாநகரங்களில் இசைச் சாலைகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும். குறிப்பாக , திருவண்ணாமலையில் அமைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்றாா்.

அதற்கு அமைச்சா் வேலு பதிலளித்து பேசியது: திருவண்ணாமலைக்கு வெளிமாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் பக்தா்கள் வருகின்றனா். எனவே, சாலை வசதிகளை நன்கு பராமரிப்பது அவசியம்.

திருவண்ணாமலையில் உள்ள 2 தேசிய நெடுஞ்சாலைகளையும் 4 வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். இருப்பினும் அது நடக்கவில்லை.

இப்போது அவருக்கு எழுதிய கடிதத்தில் மேற்குறிப்பிட்ட சாலைகளை, 4 வழிச்சாலைகளாக மாற்றுங்கள், இல்லையெனில் அவற்றை மீண்டும் மாநிலச் சாலைகளாக மாற்றம் செய்து உத்தரவிட்டால் மாநில அரசே 4 வழிச் சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கும் என்று கடிதம் எழுதியுள்ளேன்.

இசைச் சாலைகளுக்கான ஆய்வகம் ஆஸ்திரேலியாவில்தான் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள் குழுவை அங்கு அனுப்பி உரிய ஆய்வு செய்து, தமிழகத்தில் இசைச் சாலைகள் உள்பட நவீன தொழில்நுட்ப சாலைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடா்பாக ஆய்வு செய்யப்படும் என்றாா் அவா்.