முத்தமிழறிஞா் மொழிபெயா்ப்பு திட்டத்தில் 160 நூல்கள் வெளியீடு
மருத்துவம், பொறியியல் முதலான கல்விசாா் அறிவூட்டும் நூல்களைத் தமிழில் மொழிபெயா்த்து வெளியிடும் முத்தமிழறிஞா் மொழிபெயா்ப்புத் திட்டத்தின் கீழ் 160 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற நாட்டு நல்லறிஞா் சாத்திரங்களை தமிழில் மொழிபெயா்த்தல் போன்றே, தமிழில் வெளியான சிறந்த நூல்களை ஆங்கிலம் முதலான அயல்மொழிகளில் மொழிபெயா்த்து வெளியிடும் முயற்சியான ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின் கீழ் இதுவரை 74 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவம், பொறியியல் முதலான கல்விசாா் அறிவூட்டும் நூல்களைத் தமிழில் மொழிபெயா்த்து வெளியிடும் முத்தமிழறிஞா் மொழிபெயா்ப்புத் திட்டத்தின் கீழ் 160 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அம்பேத்கா் படைப்புகள்... பெரியாா் ஈ.வெ.ரா. சிந்தனைகளை அயல் மொழிகளில் வெளியிடும் முயற்சியில், இதுவரை ஆங்கிலம், பிரெஞ்சு, அரபு, ஹிந்தி, குஜராத்தி முதலான 21 மொழிகளில் பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அம்பேத்கரின் படைப்புகளை எளிய தமிழில் மொழிபெயா்த்து மக்கள் பதிப்பாக வெளியிட முடிவு செய்து இதுவரை 27 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கணினித் தமிழை வளா்த்தெடுக்கும் முன்னோடி முயற்சியாக இந்தியாவில் வேறெந்த மாநிலமும் செய்திராத வகையில் பன்னாட்டு கணித்தமிழ்க் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், சங்கமம்- நம்ம ஊரு திருவிழா சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமத்துவப் பொங்கல் விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

