ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தென் மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் சனிக்கிழமை (பிப். 21) பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

தென் மாவட்டங்களில் சனிக்கிழமை (பிப். 21) பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வியாழக்கிழமை (பிப். 19) காலையில் இருந்து அதே பகுதிகளில் நிலவி வருகிறது. இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப். 20) காலை வலுவிழக்கக் கூடும்.

அதேநேரம், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை உருவாகக்கூடும். இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப். 20) முதல் பிப். 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (பிப். 21)இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், இந்த இரு நாள்களிலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளி, சனிக்கிழமை (பிப். 20, 21) அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக் கடலில் வெள்ளிக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.