பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில்தான் குறைவு: முதல்வா்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நிகழ்வதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

News image

மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 7:13 pm

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நிகழ்வதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்திருப்பதாகவும், பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தாா்.

அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம்:

இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பும், குழந்தைகள் பாதுகாப்பும் சிறப்பாக இருக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் விளங்குவதாக மத்திய அரசு தகவல்களே தெரிவிக்கின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் கலவரமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாக நிகழ்கின்றன. அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக இருக்கிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.