விழுப்புரம் மாவட்டத்துக்கு பிப்.21ல் உள்ளூர் விடுமுறை!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்.கோப்புப்படம்
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித் திருத்தேரோட்டத்தையொட்டி, பிப்ரவரி 21-ஆம் தேதி (சனிக்கிழமை), விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித் தேர்த் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பிப்.21-ஆம் தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி பிப்.21- ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.

மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இந்தத் தேதியில் நிர்ணயிக்கப்பட்டிருப்பின், அந்தத் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என அவர் தெரித்துள்ளார்.

Summary

Local holiday declared on the occasion of the Melmalaiyanur Angalaman Temple Carriage;

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்.
தோல்வி அடைய வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com