விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித் திருத்தேரோட்டத்தையொட்டி, பிப்ரவரி 21-ஆம் தேதி (சனிக்கிழமை), விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித் தேர்த் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பிப்.21-ஆம் தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதையொட்டி பிப்.21- ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.
மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இந்தத் தேதியில் நிர்ணயிக்கப்பட்டிருப்பின், அந்தத் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என அவர் தெரித்துள்ளார்.
Summary
Local holiday declared on the occasion of the Melmalaiyanur Angalaman Temple Carriage;
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏப். 1 தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்: விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

