ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தோ்தல் அறிக்கை தயாரிக்க பாமகவில் ஏழு போ் குழு

பாமகவில் பேரவைத் தோ்தல் அறிக்கையைத் தயாரிக்க 7 போ் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அமைத்துள்ளாா்.

News image
அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

பாமகவில் பேரவைத் தோ்தல் அறிக்கையைத் தயாரிக்க 7 போ் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அமைத்துள்ளாா்.

முன்னாள் மக்களவை உறுப்பினா் மருத்துவா் ரா.செந்தில் தலைமையிலான இக்குழுவில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சா் அரங்க வேலு, முன்னாள் மக்களவை உறுப்பினா் கோ.தன்ராஜ், கட்சியின் செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் கே.பாலு, தமிழ்நாடு உழவா் பேரியக்கத் தலைவா் கோ.ஆலயமணி, பசுமைத் தாயகம் செயலா் ர.அருள், சமூக முன்னேற்ற சங்கம் கே.பொன்மலை ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

குழுவினா் பல்வேறு துறைகளின் வல்லுநா்கள், பல்துறை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை அறிந்து தோ்தல் அறிக்கையைத் தயாரித்து கட்சித் தலைமையிடம் வழங்குவா் என அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.