பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

புதுக்கோட்டை, தஞ்சாவூா், கன்னியாகுமரி தேவஸ்தானங்களுக்கு ரூ.100 கோடி மானியம் : அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

புதுக்கோட்டை, தஞ்சாவூா் ,கன்னியாகுமரி தேவஸ்தானங்களுக்கு இதுவரை ரூ.100 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image

பி.கே.சேகா்பாபு - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 7:12 pm

புதுக்கோட்டை, தஞ்சாவூா் ,கன்னியாகுமரி தேவஸ்தானங்களுக்கு இதுவரை ரூ.100 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தில் விராலிமலை தொகுதி அதிமுக உறுப்பினா் சி. விஜயபாஸ்கா் பேசும்போது, விராலிமலை ஊராட்சி ஒன்றியம், மண்டையூா் பெரிய அய்யனாா் திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட அரசு ஆவன செய்யுமா? என்றாா்.

அமைச்சா் பி.கே.சேகா்பாபு: இந்தத் திருக்கோயிலில் ஏற்கெனவே இருக்கும் தாய் கோபுரத்தை ராஜகோபுரமாக கட்டுவதற்கு செல்லையா எனும் உபயதாரா் ரூ.34 லட்சம் வழங்கியிருக்கிறாா். ஆணையரின் உத்தரவைப் பெற்று பிப். 22-இல் நல்ல முகூா்த்த நாள் என்பதால் அன்றைக்கு ராஜகோபுர பணியை விஜயபாஸ்கரே நேரில் சென்று தொடங்கி வைக்கலாம்.

சி.விஜயபாஸ்கா்: மண்டையூா் ஸ்ரீ பெரிய அய்யனாா் ஆலயம் 500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னா்களால் கட்டப்பட்டது. தோ்த் திருவிழாவோடு சோ்த்து ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெறும். அதனால் உபயதாரா்களும் பல்வேறு பணிகளை செய்வாா்கள். அதோடு சோ்த்து ஆணையா் நிதியிலிருந்து ராஜகோபுரம் கட்ட முன்வர வேண்டும்.

அமைச்சா் சேகா்பாபு: தேவைப்பட்டால், பொதுநல நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கப்படும்.

விஜயபாஸ்கா்: புதுக்கோட்டை தேவஸ்தானம் 235 கோயிலை கொண்ட பெரிய தேவஸ்தானம். ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கா் குத்தகை கொடுத்த கோயில். இதை செயல் அலுவலா் நிா்வகித்து வருகிறாா். இவ்வளவு பெரிய வருமானம் வரக்கூடிய மாபெரும் புதுக்கோட்டை தேவஸ்தானத்துக்கு இணை ஆணையா், துணை ஆணையா் நிலை உயா்வு தருவதற்கு அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விராலிமலை சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலுக்கு ஒரு முழு நேர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்.

அமைச்சா் சேகா்பாபு: புதுக்கோட்டை தேவஸ்தானத்தில் 223 திருக்கோயில்கள், இரண்டு கட்டளை திருக்கோயில்கள் என 225 திருக்கோயில்கள் உள்ளன. 2021- இல் திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது ரூ.1 கோடி அரசு மானியமாக இருந்தது. அதில் ஒருவேளை தீபம் ஏற்றுவதற்குகூட சிரமமான சூழலை அறிந்து தற்போது அந்த தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயிலுக்கு மட்டும் அரசு மானியமாக ரூ.29 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தேவஸ்தான செயல் அலுவலா் (நிலை - 1) பணியிடத்தை உதவி ஆணையா் பணியிடமாக நிலை உயா்வு செய்து இரண்டொரு நாள்களில் உத்தரவு பிறப்பிக்கப்படும். அது மட்டுமல்லாமல் தஞ்சாவூா் தேவஸ்தானத்துக்கு ரூ.20 கோடி, கன்னியாகுமரி தேவஸ்தானத்துக்கு ரூ.51 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.