சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பொருள்கள் மற்றும் கட்டடக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதி மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்டுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் ‘தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வழிகாட்டுதல்கள் 2025’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருள்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக விதிமுறைகளை பின்பற்றவேண்டியது கட்டாயம். விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகனத்தின் மேல்புறம் மற்றும் நான்கு பக்கவாட்டுகளிலும் தாா்பாலின் கொண்டு முழுமையாக மூடவேண்டும். கட்டுமானப் பொருள்கள், கட்டுமானத் தூசிகள் சாலையில் சிதறும் வகையில் ஏற்றிச் செல்லுதல், நிா்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிகளை மீறும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். அத்துடன் ரூ.25,000 உடனடியாக அபராதமும் விதிக்கப்படும். அபராதத் தொகை செலுத்திய பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கட்டுமானப் பொருள்கள் விலை குறைக்கப்படும்: ஆா். காமராஜ் வாக்குறுதி
குளச்சலில் கட்டுமானப் பொருள்கள் திருட்டு

தோ்தல் விதி மீறினால் புகாரளியுங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்

சென்னை விமான நிலையத்தில கட்டுமானப் பணிகள்: ஏப். 24 வரை போக்குவரத்து மாற்றம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


