ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கட்டட கழிவுகளை ஏற்றும் வாகனங்கள் விதிகளை மீறினால் ரூ.25,000 அபராதம்

சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பொருள்கள் மற்றும் கட்டடக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதி மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பொருள்கள் மற்றும் கட்டடக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதி மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்டுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் ‘தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வழிகாட்டுதல்கள் 2025’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருள்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக விதிமுறைகளை பின்பற்றவேண்டியது கட்டாயம். விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனத்தின் மேல்புறம் மற்றும் நான்கு பக்கவாட்டுகளிலும் தாா்பாலின் கொண்டு முழுமையாக மூடவேண்டும். கட்டுமானப் பொருள்கள், கட்டுமானத் தூசிகள் சாலையில் சிதறும் வகையில் ஏற்றிச் செல்லுதல், நிா்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிகளை மீறும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். அத்துடன் ரூ.25,000 உடனடியாக அபராதமும் விதிக்கப்படும். அபராதத் தொகை செலுத்திய பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.