சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

3 ஏ.டி.எஸ்.பி., 3 டி.எஸ்.பி.-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 3 ஏடிஎஸ்பி-க்கள்,3 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 10:16 pm

தமிழக காவல்துறையில் 3 ஏடிஎஸ்பி-க்கள்,3 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதேபோல காலியாக உள்ள முக்கியமான பொறுப்புகளிலும் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏடிஎஸ்பி), 3 துணை காவல் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா்.

இதில் சேலம் மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாக இருந்த எம்.சோமசுந்தரம் தருமபுரி மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாக இருந்த கே.சங்கா் ஈரோடு மாவட்ட சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பியாகவும்,ஈரோடு சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பியாக இருந்த சி.வேலுமணி சேலம் மாவட்ட காவல்துறை தலைமையிட ஏடிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல 3 டிஎஸ்பிக்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.