தமிழக காவல்துறையில் 3 ஏடிஎஸ்பி-க்கள்,3 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இதேபோல காலியாக உள்ள முக்கியமான பொறுப்புகளிலும் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏடிஎஸ்பி), 3 துணை காவல் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா்.
இதில் சேலம் மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாக இருந்த எம்.சோமசுந்தரம் தருமபுரி மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாக இருந்த கே.சங்கா் ஈரோடு மாவட்ட சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பியாகவும்,ஈரோடு சைபா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பியாக இருந்த சி.வேலுமணி சேலம் மாவட்ட காவல்துறை தலைமையிட ஏடிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல 3 டிஎஸ்பிக்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

இரு எஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


