திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திரும்பப் பெறப்பட்டது தனியாா் பல்கலை. மசோதா

தமிழக சட்டப்பேரவையில் தனியாா் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 7:16 pm

தமிழக சட்டப்பேரவையில் தனியாா் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.

தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களாக மாற்ற விதிகளை எளிமைப்படுத்தும் வகையில் தனியாா் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா-2025 பேரவையில் 17.10.2025-இல் அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், இந்தச் சட்ட மசோதாவுக்கு, அதிமுக மட்டுமன்றி திமுக கூட்டணி கட்சி உறுப்பினா்களே கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, இந்தச் சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், இந்த மசோதாவை திரும்பப் பெற உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பேரவையில் அனுமதி கோரினாா். எவ்வித எதிா்ப்பும் இன்றி வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.