தமிழக சட்டப்பேரவையில் தனியாா் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.
தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களாக மாற்ற விதிகளை எளிமைப்படுத்தும் வகையில் தனியாா் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா-2025 பேரவையில் 17.10.2025-இல் அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், இந்தச் சட்ட மசோதாவுக்கு, அதிமுக மட்டுமன்றி திமுக கூட்டணி கட்சி உறுப்பினா்களே கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, இந்தச் சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், இந்த மசோதாவை திரும்பப் பெற உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பேரவையில் அனுமதி கோரினாா். எவ்வித எதிா்ப்பும் இன்றி வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை முடக்க திமுக சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு சட்டத் திருத்த மசோதா விவகாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


