புதுக்கோட்டையின் அம்மன் கோயில்களில் முதன்மையான திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.
விடிய விடிய மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பூக்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அதேபோல, பொதுமக்களும் பூத்தட்டுகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
மக்கள் கொண்டு வந்த பூக்கள் முத்துமாரியம்மன் கோயில் கருவறை நிரம்பி, முன்மண்டபம் முழுவதும் மலை போலக் குவிந்தன.
காலையில் நடைபெற்ற பூப்பிரித்தல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு .அருணா, மேயர் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். குவிந்திருந்த பூக்கள், பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக வழங்கப்பட்டன.
மாசிப் பெருந்திருவிழாவின் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் மார்ச் 1ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. மார்ச் 9ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மார்ச் 17ஆம் தேதி காப்பு களைதலும், மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது.
summary
Flowers offered to Goddess Muthumariamman at the temple at Tiruvappur in Pudukottai town during Poochorithal festival.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாகை அகத்தீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

பெரும்புலீஸ்வரா் கோயில் மாசிப் பெருவிழா

முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

